பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
சென்னை: ராஜா தயாரித்து, இயக்கி நடித்துள்ள, மாவீரன் பிள்ளை படம் வாயிலாக, மறைந்த சந்தன வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, நடிகையாக அறிமுகமாகிறார். பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிப்பவராக அவர் நடித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி: இது, ஜாதி சம்பந்தப்பட்ட படம் அல்ல. கூத்து கலைஞர்கள், போலி காதல், மது விலக்கு, விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்களை, இப்படத்தில் பேசியுள்ளோம். அப்பாவின் கதைக்கும், மாவீரன் பிள்ளை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது படம் வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால், அவரது, கெட்டப்பில் உள்ள என் படம், போஸ்டரில் வந்தது.
அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால், நிச்சயம் செய்வேன். இதற்காக, அம்மாவிடம் உரிய அனுமதியும் பெறுவேன். அப்பாவின் உண்மையான கதை, இன்னும் படமாக்கப்படவில்லை. நாளிதழ்களில் வந்த செய்தியை வைத்து தான், வீரப்பனின் வாழ்க்கை கதையை, படம் எடுத்துள்ளனர். அப்பா புதைத்து வைத்த பணம், காட்டில் இருக்கிறது; ஆனால், இப்போது அது செல்லாது. எங்கு இருக்கிறது என்றும் யாருக்கும் தெரியாது. அது, அப்பாவுக்கும், அவருடன் இருந்த கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.