'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
சென்னை: ராஜா தயாரித்து, இயக்கி நடித்துள்ள, மாவீரன் பிள்ளை படம் வாயிலாக, மறைந்த சந்தன வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி, நடிகையாக அறிமுகமாகிறார். பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிப்பவராக அவர் நடித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி: இது, ஜாதி சம்பந்தப்பட்ட படம் அல்ல. கூத்து கலைஞர்கள், போலி காதல், மது விலக்கு, விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்களை, இப்படத்தில் பேசியுள்ளோம். அப்பாவின் கதைக்கும், மாவீரன் பிள்ளை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது படம் வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால், அவரது, கெட்டப்பில் உள்ள என் படம், போஸ்டரில் வந்தது.
அப்பாவின் கதையை படமாக்க முடிந்தால், நிச்சயம் செய்வேன். இதற்காக, அம்மாவிடம் உரிய அனுமதியும் பெறுவேன். அப்பாவின் உண்மையான கதை, இன்னும் படமாக்கப்படவில்லை. நாளிதழ்களில் வந்த செய்தியை வைத்து தான், வீரப்பனின் வாழ்க்கை கதையை, படம் எடுத்துள்ளனர். அப்பா புதைத்து வைத்த பணம், காட்டில் இருக்கிறது; ஆனால், இப்போது அது செல்லாது. எங்கு இருக்கிறது என்றும் யாருக்கும் தெரியாது. அது, அப்பாவுக்கும், அவருடன் இருந்த கோவிந்தனுக்கும் மட்டுமே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.