ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி, சென்னை-28 படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய்.. சினிமாவில் 15 வருடங்களை கடந்துவிட்ட ஜெய், தேர்தல் நாளான நேற்று தனது 38வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த பிறந்தநாளன்று அவரே எதிர்பாராத வகையில் சர்ப்ரைஸாக நேரிலேயே வந்து, ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு.
சிம்புவை தனது துவக்க காலம் தொட்டே ஆதர்ச வழிகாட்டியாக, அண்ணனாக பின்பற்றி வரும் ஜெய், சிம்புவின் இந்த அதிரடி வருகையால் நெகிழ்ந்து விட்டார். இதுகுறித்து கூறியுள்ள ஜெய், “முற்றிலும் எதிர்பாராத மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் வந்ததில் எனக்கான சந்தோசம் அளவிட முடியாதது. என்னுடைய பிறந்தநாளை இன்னும் சிறப்பான நாளாக்கியதற்கு நன்றி” என கூறியுள்ளார் ஜெய்.
ஜெய்யின் மீது கொண்ட பாசத்தால், தான் நடித்த வேட்டை மன்னன் படத்தில் அவரையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்தார் சிம்பு.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் சில நாட்களிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.




