ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி, சென்னை-28 படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய்.. சினிமாவில் 15 வருடங்களை கடந்துவிட்ட ஜெய், தேர்தல் நாளான நேற்று தனது 38வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த பிறந்தநாளன்று அவரே எதிர்பாராத வகையில் சர்ப்ரைஸாக நேரிலேயே வந்து, ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு.
சிம்புவை தனது துவக்க காலம் தொட்டே ஆதர்ச வழிகாட்டியாக, அண்ணனாக பின்பற்றி வரும் ஜெய், சிம்புவின் இந்த அதிரடி வருகையால் நெகிழ்ந்து விட்டார். இதுகுறித்து கூறியுள்ள ஜெய், “முற்றிலும் எதிர்பாராத மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் வந்ததில் எனக்கான சந்தோசம் அளவிட முடியாதது. என்னுடைய பிறந்தநாளை இன்னும் சிறப்பான நாளாக்கியதற்கு நன்றி” என கூறியுள்ளார் ஜெய்.
ஜெய்யின் மீது கொண்ட பாசத்தால், தான் நடித்த வேட்டை மன்னன் படத்தில் அவரையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்தார் சிம்பு.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் சில நாட்களிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.