நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக அவரது மருமகனான தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 67ஆவது தேசிய விருது வழங்கும் விழா மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். அதோடு, தேசிய விருது வழங்கப்படும் அன்றைய தினமே ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் ரஜினி, தனுஷ் இருவருக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளது. அதிலும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இரண்டு பேர் ஒரே நாளில் உயரிய விருதுகளை பெறப்போகிறார்கள்.