தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. தற்போது ஆந்திர அரசியலில் பிஸியாக உள்ளார். அதோடு தமிழில் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஜாவிற்கு இரண்டு ஆபரேஷன்கள் நடந்துள்ளன. இதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் அவருக்கு கர்ப்பப்பை தொடர்பான பிரச்னையில் இந்த ஆபரேஷன் நடத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுப்பற்றி ரோஜாவின் கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ‛‛ரோஜாவிற்கு கடந்தாண்டே இந்த ஆபரேஷன் நடக்க வேண்டியது. ஆனால் அவர் அரசியலில் பிஸியாக இருந்ததாலும், கொரோனா பிரச்னையாலும் தாமதமானது. இப்போது நல்லபடியாக இரண்டு ஆபரேஷன்கள் நடந்து முடிந்துள்ளன. கடவுள் அருளால் தற்போது அவர் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு வார காலங்கள் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. தொடர்ந்து அவரது உடல்நிலைப்பற்றி அவ்வப்போது ரசிகர்களுக்கு சொல்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.