தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என 'பாகுபலி' படம் வெளிவரும் வரை பெயரை வைத்திருந்தவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஷங்கர். 'பாகுபலி' படம் வந்த இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்றதும் அந்த 'பிரம்மாண்ட இயக்குனர்' என்ற பெயர் இயக்குனர் ராஜமவுலிக்குப் போய்விட்டது.
தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2' படத்தை நிறுத்திவிட்டு அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கப் போகும் படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.
அந்தப் படம் 'முதல்வன்' படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்ற ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 1999ம் ஆண்டு அர்ஜுன், மனிஷா கொய்ரலா நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முதல்வன்'. அப்படத்தில் அர்ஜுன் 'ஒரு நாள் முதல்வர்' ஆக அதிரடி செய்திருப்பார்.
அந்த முதல்வர் கதாபாத்திரத்தில் தான் ராம் சரண் நடிக்கப் போகிறாராம். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படம் மூலம் ராம் சரண் தமிழில் அறிமுகமாகிறார் என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு, ஹிந்தியில் மட்டும் தான் நேரடியாக உருவாக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது. மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்படலாம்.