கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தென்னிந்திய சினிமா வரலாற்றில் மகத்தான வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள். உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்தது. இரண்டு பாகங்களின் கதைப்படி எல்லாமே நிறைவடைந்து விட்டது. இதனால் 3ம் பாகத்துக்கான ஸ்கோப் இல்லை என்ற கூறப்பட்டு வந்தது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் 3ம் பாகம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் பாகுபலியின் 3ம் பாகத்தை தயாரிக்க கார்பரேட் ஓடிடி தளம் ஒன்று முன்வந்திருக்கிறது. இதற்காக அது 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் ராஜமவுலியிடம் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளது. 9 எபிசோட்களை கொண்ட தொடரா இதனை தயாரிக்க அந்த நிறுவனம் விரும்புகிறது. இதற்கு ராஜமவுலி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் பிசியாக இருக்கும் ராஜமவுலி அந்த பணிகளை முடித்து விட்டு இதில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.