ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தென்னிந்திய சினிமா வரலாற்றில் மகத்தான வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள். உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்தது. இரண்டு பாகங்களின் கதைப்படி எல்லாமே நிறைவடைந்து விட்டது. இதனால் 3ம் பாகத்துக்கான ஸ்கோப் இல்லை என்ற கூறப்பட்டு வந்தது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் 3ம் பாகம் இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்து விட்டார்.
இந்த நிலையில் பாகுபலியின் 3ம் பாகத்தை தயாரிக்க கார்பரேட் ஓடிடி தளம் ஒன்று முன்வந்திருக்கிறது. இதற்காக அது 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் ராஜமவுலியிடம் பேச்சு வார்த்தையை தொடங்கி உள்ளது. 9 எபிசோட்களை கொண்ட தொடரா இதனை தயாரிக்க அந்த நிறுவனம் விரும்புகிறது. இதற்கு ராஜமவுலி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.
தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் பிசியாக இருக்கும் ராஜமவுலி அந்த பணிகளை முடித்து விட்டு இதில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.