பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
இப்படத்தின் சில பாடல்கள் யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்தில் 'எப்படி இருந்த நாங்க' என்ற நகைச்சுவைப் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. விவேக் மெர்வின் இசையமைப்பில் அந்தோணி தாசன் பாடியுள்ள அந்தப் பாடலின் சிறு வீடியோவைப் பகிர்ந்து ராஷ்மிகா படம் பற்றியும் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோவையும் பாடல் வரிகளையும் கேளுங்கள்.. இதைவிட சிறப்பாக இருக்க முடியாது. இந்தக் குறிப்பிட்ட காட்சி படமாக்கப்படும் போது நானும் அதைத்தான் நினைத்தேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் எவ்வளவு ரசித்து நடித்தேன் என்பதை நீங்கள் விரைவில் பார்க்கப் போகிறீர்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாடலில் ஒரு நிலத்தில் குட்டி டிராக்டரை வைத்து அவர் உழும் காட்சி இடம் பெற்றுள்ளது. சேற்றில் குட்டி டிராக்டரை ஓட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதிலும் ஒரு பெண் ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கும். அக்காட்சியில் ராஷ்மிகா அதை நன்றாகவே செய்திருக்கிறார். தான் அந்தக் காட்சியில் நடிக்க சிரமப்பட்டதும் அதற்கேற்றாற் போல பாடல் வரி 'எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம், வான்ட்டடா வந்து மாட்டிக்கிட்டோம்” என பொருத்தமாக இருப்பதைத்தான் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.