நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மலையாள ஆக்ஷன் ஹீரோ சுரேஷ் கோபி. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷ்கோபி தற்போது பாப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ஜோஷி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் எர்ணாகுளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அவர் தேர்தல் பணிகளை கவனிப்பார் என்று தெரிகிறது.