ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள ஆக்ஷன் ஹீரோ சுரேஷ் கோபி. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். தற்போது அவர் பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சுரேஷ்கோபி நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷ்கோபி தற்போது பாப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ஜோஷி இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் எர்ணாகுளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுரேஷ் கோபிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அவர் தேர்தல் பணிகளை கவனிப்பார் என்று தெரிகிறது.