‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கொரோனா காலகட்டத்தில் பல நடிகர்கள் ஓய்வாக இருந்தபோதும், மலையாள நடிகர் பஹத் பாசில் மட்டும் வீட்டுக்குள்ளேயே படப்பிடிப்பை நடத்தி, ஒரு படத்தையே அந்த சமயத்தில் ரிலீஸ் செய்தும் விட்டார். தொடர்ந்து பரபரப்பாக நடித்துவந்த பஹத் பாசில், தற்போது நடித்துவரும் 'மலையன் குஞ்சு' என்கிற படப்பிடிப்பின்போது, உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். குறிப்பாக மூக்கில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பஹத் பாசில், தற்போது வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். இந்தநிலையில் அவர் கட்டிலில் படுத்து ஓய்வெடுத்து வரும் புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அவரது மனைவி நடிகை நஸ்ரியா, 'ஆல் இஸ் வெல்” என கூறியுள்ளார். பஹத் பாசில் நடித்து வரும் இந்தப்படத்தை அவரது தந்தையான இயக்குனர் பாசிலே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..