செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்திற்கு பிறகு தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியபோது, அவரது கணவரான சூர்யா அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படங்களை தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அதேபோல் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சாயிஷாவிற்கும் கதையின் நாயகியாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ள சாயிஷா, தற்போது டெடி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருப்பவர், தெலுங்கு-, கன்னடத்தில் தயாராகி வரும் யுவரத்னா என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது சாயிஷாவுக்கும் ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவைப் போன்று கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவிக்காக தானே ஒரு படம் தயாரிக்கும் முடிவில் உள்ளார். இதற்காக சில இளவட்ட டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறார் ஆர்யா.