பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மராட்டிய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு வந்தவர் மிருனாள் தாக்கூர். சூப்பர் 30, பாட்டியா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், உள்பட பல படங்களில் நடித்துள்ளர். ஜெர்சி, தோபான் படங்களில் நடித்து வருகிறார். இடையிடையில் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த பாகுபலி பிபோர் தி பிக்னிங் வெப் சீரிஸ் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் முதன் முறையாக தமிழ் தெலுங்கு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதனை அந்தாள ராட்சஷி, லீ, கிருஷ்ண காதி வீர பிரேம கதா படங்களை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார்.
படத்திற்கு யுத்தம் தோ ரசினா பிரேம கதா என்று தலைப்பு வைக்கப்படலாம் என்று தெரிகிறது. இதில் மிருனாள் தாக்கூர், துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கிறார். ராணுவ அதிகாரியாக துல்கர் நடிக்கிறார். 1964ம் ஆண்டு வாக்கில் நடக்கும் பீரியட் கதை.