புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இரண்டு பொம்மைகளை மட்டும் வைத்து கொண்டு, தன்னை கொரோனா நோய் தாக்கிய நிலையிலும், வீட்டுக்குள் தனியாளாக இருந்து ஒரு வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர். தமிழில் ஜூலை காற்றில் உள்பட பல படங்களுக்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தவுசண்ட் கிஸ்சஸ் என்ற பொம்மை பாடல் உருவான விதம் குறித்து அவர் கூறியதாவது: ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியா கிளம்பிக் கொண்டிருந்தேன், அப்போது தான் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது . அடுத்த சில நாட்களில் எனக்கு கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த பிறகு என்னை தனிமைபடுத்தி கொள்ள வேண்டியிருந்தது.
தனிமை கொடியதாக இருந்தது. தனிமையை போக்க ஏதாவது செய்ய நினைத்தேன் அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. முதலில் வெறும் வீடியோவை தான் படம்பிடிக்க ஆரம்பித்தேன். பின்னர் என்னிடமிருந்த இரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து கொண்டு, ஒரு வீடியோவை படம் பிடிக்க துவங்கினேன். மனைவியின் கண்டிப்பால் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. வீட்டுக்குள்ளாகவே பல பின்னணிகளை உருவாக்கி படம் பிடிக்க துவங்கினேன்.
வீட்டில் இருந்த பொருட்களை பயன்படுத்தி பல பின்னணிகளை தனியாளாக உருவாக்க வேண்டியிருந்தது. மொட்டைமாடி, குளியலறை ஷவர் என பல இடங்களில் புதுமையான பின்னணியை உருவாக்கி படம்பிடித்தேன். தீபாவளி நாளில் பட்டாசுகளின் பின்னணியிலும் வீடியோ எடுத்துள்ளேன். இவ்வீடியோவிற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியை அணுகினேன். அடுத்த 24 மணி நேரத்தில் முதல் பிரதியாக ஒரு இசையை தந்தார். பின்னர் ஒரு மாதத்தில் முழுப்பாடலும் உருவாகி விட்டது. என்றார்.