அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக சகுந்தலம் என்ற சரித்திர படத்திலும் நடிக்கப்போகிறார். இந்நிலையில், உலக மகளிர் தினமாக மார்ச் 8-ந்தேதியில் இருந்து தான் ஒரு புதிய சவாலை ஏற்கப்போவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா.
அதில், ''நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. நம்முடைய மதிப்பிற்கு குறைவான தகுதிகளை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இந்த மகளிர் தினத்தில் இருந்து என்னை நான் இன்னும் அதிகமாக நம்பப்போகிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்தவொரு செயலும், மாற்றமும் உங்களிடமிருந்து தான் தொடங்க வேண்டும். மாற்றத்திற்கான சவாலை நான் ஏற்றுள்ளேன், நீங்கள்'' என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.