ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிபலமான நடிகையாக உள்ளார் டாப்சி. கடந்த சில தினங்களாக இவர், இயக்குனர் அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட 30 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார் டாப்சி.
அவர் பதிவிட்டாவது : ''கடந்த "3 நாட்களில் 3 விஷயங்களைத் தேடி தீவிரமான வருமான வரி சோதனை நடந்தது.
1. பாரீஸில் எனக்கு சொந்தமாக பங்களா உள்ளதாம். அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை வரப்போகிறது.
2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ப்ரேம் செய்து மாட்டி எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால், அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன்.
3. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகள் என்னிடம் இருக்கின்றன.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.