அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பிபலமான நடிகையாக உள்ளார் டாப்சி. கடந்த சில தினங்களாக இவர், இயக்குனர் அனுராக் காஷ்யாப் உள்ளிட்ட 30 பேரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார் டாப்சி.
அவர் பதிவிட்டாவது : ''கடந்த "3 நாட்களில் 3 விஷயங்களைத் தேடி தீவிரமான வருமான வரி சோதனை நடந்தது.
1. பாரீஸில் எனக்கு சொந்தமாக பங்களா உள்ளதாம். அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை வரப்போகிறது.
2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ப்ரேம் செய்து மாட்டி எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால், அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன்.
3. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகள் என்னிடம் இருக்கின்றன.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.