22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது அவரையே கல்யாணம் செய்து கொள்ள தயாராக விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் அனுபமாவின் தாயார் தனது இன்ஸ்டாகிராமில் அந்த செய்தியை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''அனுபமாவும், பும்ராவும் இன்ஸ்டாராமில் பாலோ செய்வதை பிடிக்காதவர்கள் தான் அவர்களைப்பற்றி இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு முன்புகூட அவர்களைப்பற்றி இப்படித்தான் செய்தி பரப்பினார்கள். அதையடுத்து சோசியல் மீடியாவில் பாலோ செய்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது மீண்டும் பாலோ செய்வதை அடுத்து காதல் -கல்யாணம் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.
ஆனபோதும் நாங்கள் இதை பாசிட்டீவாகவே பார்க்கிறோம். அவர்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை. எதற்காக இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார் என்பது புதிராக உள்ளது. தற்போது அனுபமா ராஜ்கோட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அதனால் இந்த சமயத்தில் இப்படியொரு செய்தி பரவி வருவதை நாங்கள் வேடிக்கையாகவே பார்க்கிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.