மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது அவரையே கல்யாணம் செய்து கொள்ள தயாராக விட்டதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் அனுபமாவின் தாயார் தனது இன்ஸ்டாகிராமில் அந்த செய்தியை மறுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ''அனுபமாவும், பும்ராவும் இன்ஸ்டாராமில் பாலோ செய்வதை பிடிக்காதவர்கள் தான் அவர்களைப்பற்றி இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதற்கு முன்புகூட அவர்களைப்பற்றி இப்படித்தான் செய்தி பரப்பினார்கள். அதையடுத்து சோசியல் மீடியாவில் பாலோ செய்வதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர். ஆனால் இப்போது மீண்டும் பாலோ செய்வதை அடுத்து காதல் -கல்யாணம் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.
ஆனபோதும் நாங்கள் இதை பாசிட்டீவாகவே பார்க்கிறோம். அவர்களுக்கிடையே காதல் எதுவும் இல்லை. எதற்காக இதுபோன்ற செய்திகளை பரப்புகிறார் என்பது புதிராக உள்ளது. தற்போது அனுபமா ராஜ்கோட்டிற்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அதனால் இந்த சமயத்தில் இப்படியொரு செய்தி பரவி வருவதை நாங்கள் வேடிக்கையாகவே பார்க்கிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.




