22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். ஜெ. வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்க, எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார்.
இதையடுத்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமும் ஹிந்தியில் தயாராகப் போகிறது. ஏக் அவுர் நரேன் என்று பெயரிப்பட்டுள்ள இந்த படத்தை வங்காள மொழி இயக்குனர் மிலன் பவுமிக் இயக்குகிறார்.
இவர் இதற்கு முன்பு டில்லியில் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த நிர்பயாவின் கதை, சியாம பிரசாத் முகர்ஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு கதைகளை படமாக எடுத்தவர். மேலும், ஏக் அவுர் நரேன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கும் இவர், பிரதமர் மோடியின் கதைக்குள், விவேகானந்தரைப் பற்றிய பயோபிக்கையும் இணைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரதமர் மோடியின் வேடத்தில் மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடித்த கஜேந்திர சவுஹான் நடிக்கிறார்.