நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடமிருந்து ரூ. 70 லட்சத்தை நடிகர் ஆர்யா வாங்கியதாகவும், அதை திருப்பித்தர மறுப்பதாகவும் இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், ஆர்யா மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரினை தமிழக உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் கோபால்ஜா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி சரவணவேல்ராஜ் ஆகியோருக்கு அந்த புகாரை அனுப்பியுள்ளார் விட்ஜா.
அதில் அவர் கூறியிருப்பதாவது : நான் தற்போது ஜெர்மனி நாட்டின் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறேன். கொரோனா சமயத்தில் தான் பணக்கஷ்டத்தில் இருப்பதாக சொன்ன நடிகர் ஆர்யா, என்னிடத்தில் ரூ.70 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கினார். அதோடு தன்னை விரும்புவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் சொன்னவர், பின்னர் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து ஆர்யாவிடம் கேட்டபோது தன்னை தவறான வார்த்தைகளில் திட்டினார். நான் இந்த மோசடி குறித்து புகார் கொடுப்பேன் என்று சொன்னபோது, அப்படி செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஆர்யா நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பரபரப்பு செய்திகள் வெளியானபோதும் இன்னமும் ஆர்யாதரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நடிகர் ஆர்யா 2019ஆம் ஆண்டில் தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த பாலிவுட் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




