மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாள சினிமாவில் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. 100 கோடி வசூல், வெள்ளிவிழா என த்ரிஷயம் படைத்த சாதனைகள் பல. குறிப்பாக இந்திய மொழிகள், சீன மொழிகளில் ரீமேக் ஆனது. தற்போது ஹாலிவுட்டிலும் தயாராகிறது.
ஒரு குடும்ப தலைவன் தனக்கிருக்கும் சமயோசித அறிவைக் கொண்டு தன் குடும்பத்தை ஒரு கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றுவதுதான் த்ரிஷ்யத்தின் ஒன்லைன் ஸ்டோரி. மோகன்லாலும், மீனாவும் குடும்ப தலைவனும், தலைவியாகவே வாழ்ந்தார்கள். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி அதவும் வெற்றி பெற்றிருக்கிறது. 2ம் பாகம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ், மீனாதான் நடிக்கிறார்கள்.
இப்போது தமிழிலும் ரீமேக் ஆக பேச்சு நடக்கிறது. முதல் பாகத்தில் நடித்த கமலும், கவுதமியும் தற்போது பிரிந்து விட்டதால் படம் தொடங்குவதில் சின்ன பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் த்ரிஷ்யத்தின் 3ம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாராகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: த்ரிஷ்யம் 3ம் பாகத்தை தயாரிக்க நான் தயாராக இருக்கிறேன். அதற்கான ஐடியாவும் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு இருக்கிறது. மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் இதுகுறித்து பேசியிருக்கிறார்கள் என்கிறார் ஆண்டனி.