இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பாகுபலி, பாகுபலி-2 படங்களைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியாபட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து, மகேஷ்பாபு நடிக்கும் ஒரு மெகா படத்தை ராஜமவுலி இயக்கயிருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படமும் ராஜமவுலியின் முந்தைய படங்களைப்போன்று ஐந்து மொழிகளில் உருவாகிறதாம். இதையடுத்து இப்படத்தில் நடிக்க, தெலுங்கு, தமிழ், ஹிந்தி சினிமாவில் உள்ள சில பிரபல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.