எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு பொங்கல் முதல் தியேட்டர்கள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதற்குக் காரணமாக 'மாஸ்டர்' படம் இருந்தது.
அதற்குப் பிறகு வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக வசூலைப் பெற முடியாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் “பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, நானும் சிங்கிள்தான், கேர் ஆப் காதல், இது விபத்து பகுதி' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் 'பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு மட்டும் மிகக் குறைவான ரசிகர்கள் இன்று காலை காட்சிக்கு வந்திருக்கிறார்கள். மற்ற படங்களுக்கு ரசிகர்கள் வராத காரணத்தால் பல ஊர்களில் காலைக் காட்சிகளை ரத்து செய்திருக்கிறார்கள். மதியக் காட்சிகளுக்கும் இதே நிலைமைதான்.
பெரிய நடிகர்களின் படங்களை மட்டும் தியேட்டர்களில் போய்ப் பார்க்கலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. சில படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுவதேயில்லை. அப்படிப்பட்ட படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதை விட ஓடிடி தளத்தில் வெளியிட்டாலாவது மக்கள் பார்ப்பார்கள்.
கொரோனா தாக்கம் தமிழ் சினிமாவை நிறையவே மாற்றிவிட்டது. இனி, சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வரவேற்பு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.