புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷாமிலி சுகுமார். இவரது பெயரில் மர்மநபர் ஒருவர் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதில், ஷாமிலி பற்றி அவதூறான கருத்துக்களும், இளைஞர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
இது பற்றி ஷாமிலியின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வருபவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
ஷாமிலியின் இந்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .