ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? |

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு,  படங்களை தயாரித்திருந்தது. அதனை தொடர்ந்து  குதிரைவால்  திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயராக இருக்கிறது. தொடர்ந்து ரைட்டர்  மற்றும்  பொம்மை நாயகி படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்  அறிமுக இயக்குனர் தமிழ்  இயக்கும் சேத்துமான் படத்தை தயாரித்து முடித்திருக்கிறார். இது எழுத்தளார் பெருமாள் முருகனின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான பாசப் போராட்டத்தை சொல்லும் படம். கேரளாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்தப் படம் தேர்வாகி உள்ளது. மார்ச் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.