பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் |
பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவராக இரண்டாவது முறையாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பதவி வகித்து வருகிறார். இந்த சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி 2021-23ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் பிப்.,14ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு செல்வமணி போட்டியிடுகிறார்.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய செல்வமணி, ''பிப்.,14ல் பெப்சிக்கு தேர்தல் நடக்கும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்.,7ல் வெளியாகும். தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் என 13 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறும். மேலும் கொரோனா காலத்தில் பெப்சிக்கு நிதியாக ரூ.3.93 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
மேலும் பெப்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்சொன்ன தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன் அம்மா படப்படிப்பு தளம் அமைக்க முதல்வர் பழனிசாமி அறிவித்த ரூ.5 கோடி நிதியில் ஏற்கனவே இரு கட்டமாக ரூ.1.5 கோடி நிதி பெறப்பட்டது. இப்போது மூன்றாவது தவணையாக இன்று(பிப்., 4) ரூ.3.5 கோடி நிதியை முதல்வர் வழங்கி உள்ளார். அதற்காக அவருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கும் நன்றி. வருகிற பிப்., 24ல் அம்மா படப்பிடிப்பு தளம் துவங்கப்படுகிறது. இதில் பங்கேற்க முதல்வர் சம்மதம் சொல்லியிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.