பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
கடந்த ஆண்டு அக்டோபரில் தனது பத்தாண்டு காதலரான கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். அதையடுத்து மாலத்தீவிற்கு சென்று ஹனிமூன் கொண்டாடி விட்டு மும்பை திரும்பியவர், ஐதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது தனது கணவருடன் அந்த ஸ்பாட்டிற்கு வந்து அனைவரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும், இந்தியன்-2, ஹேய் சினாமிகா ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், தற்போது குலேபகாவலி பட இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் ராதிகா சரத்குமாரும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் ஸ்பாட்டில் இருந்தபோது ராதிகாவும், காஜல் அகர்வாலும் இணைந்து ஒரு போட்டோ எடுத்துள்ளனர். அந்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராதிகா சரத்குமார், அழகான புதிய மணமகளான காஜல் அகர்வாலுடன் பணியாற்றுவதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். இதற்கு காஜல் நன்றி தெரிவித்துள்ளார்.