சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அவரது மனைவியாக ஐஸ்வர்யாராய், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, குந்தவையாக த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடந்தது. பின்னர் புதுச்சேரியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வனில் நடிப்பதற்காக கொரோனா காலத்தில் த்ரிஷா வாள் சண்டை பயிற்சியும், குதிரையேற்ற பயிற்சியும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.