'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் | பிளாஷ்பேக்: காணாமல் போன நல்ல இயக்குனர் |
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2 பாகங்களாக இயக்கி வருகிறார் மணிரத்னம். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அவரது மனைவியாக ஐஸ்வர்யாராய், சுந்தர சோழனாக சரத்குமார், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, குந்தவையாக த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடந்தது. பின்னர் புதுச்சேரியில் முக்கிய காட்சிகளை படமாக்கினர். தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார். பொன்னியின் செல்வனில் நடிப்பதற்காக கொரோனா காலத்தில் த்ரிஷா வாள் சண்டை பயிற்சியும், குதிரையேற்ற பயிற்சியும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.