22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை மையப்படுத்தி நாற்காலி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குரலில், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை பாடும் பாடலின் வெளியீட்டு விழா சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அமீர்..,
நாற்காலி படமானது அமைதிபடை படம் போல அரசியல் நய்யாண்டியுடன் கூடிய படம். இந்த படத்தில் நான் எம்.ஜி.ஆரின்.ரசிகனாக நடித்துள்ளேன். இந்த படம் முழுக்க அரசியல் நையாண்டியுடன் கூடிய படம். ஆனால் யாரையும் காயபடுத்தாத அளவிற்கு இருக்கும். எம்.ஜி.ஆரின் பெருமைகள் தொடர்பான படம் என்பதால் முதல்வர் இந்த பாடலை வெளியிட வேண்டுமென்று தயாரிப்பாளர் நினைத்தார்.
எம்.ஜி.ஆர். என்பவர் அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் தான் பயன்படுத்தி உள்ளோம். இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும். சட்டமன்ற தேர்தலுக்காக இந்த படம் எடுக்கபடவில்லை . அமைதி படைக்கு பிறகு அரசியல் நய்யாண்டியுடன் கூடிய திரைபடம் வரவில்லை.
தமிழக அரசியலிலும்,சினிமாவிலும் எம்.ஜி.ஆரை தவிர்த்து பேச முடியாது. அதனால் தான் இன்றைய நிலையிலும், அவர் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை எழுந்து வருகிறது. அரசியல் என்றாலே அது எம்.ஜி.ஆர் தான் எனத் தெரிவித்தார்.