டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தேனி அருகே உள்ள சீவலம்பட்டியை சேர்ந்தவர் ராம்சந்த். இவர் தனது பெயரை தேனிபாலா என்று மாற்றிக் கொண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இயக்குனர் கலைப்புலி சேகரனிடம் உதவியாளராக பணியாற்றினார். பிறகு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். ஒரு பூ ஒரு துப்பாக்கி என்ற படத்தை இயக்கி அதில் நடித்தார். கடைசியாக திருமாயி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி பாலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்தபுற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். 46 வயதான தேனி பாலாவுக்கு செல்வி என்ற மனைவியும் பரிமளாதேவி என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.