சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தேனி அருகே உள்ள சீவலம்பட்டியை சேர்ந்தவர் ராம்சந்த். இவர் தனது பெயரை தேனிபாலா என்று மாற்றிக் கொண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தார். இயக்குனர் கலைப்புலி சேகரனிடம் உதவியாளராக பணியாற்றினார். பிறகு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். ஒரு பூ ஒரு துப்பாக்கி என்ற படத்தை இயக்கி அதில் நடித்தார். கடைசியாக திருமாயி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி பாலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்தபுற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். 46 வயதான தேனி பாலாவுக்கு செல்வி என்ற மனைவியும் பரிமளாதேவி என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.