வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடிக்கும் கேஜிஎப் சேப்டர் 2 படத்தின் டீசர் கடந்த வாரம் யு டியுபில் வெளியானது.
வெளியான நேரத்திலிருந்தே தொடர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்து வந்தது. தற்போது மேலும் ஒரு சாதனையாக 150 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஒரு வாரத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதோடு 7.4 மில்லியன் லைக்குகளும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளும் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளது.
இந்திய அளவில் பிரபலத்திலும், வசூலிலும் சாதனை படைத்த பல ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஹீரோக்கள் படைக்காத ஒரு சாதனையை கன்னட உலகின் இளம் ஹீரோவான யாஷ் படைத்திருப்பது இந்தியத் திரையுலகல் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதைவிட பொறாமைப்பட வைத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அது பற்றி பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில், “மற்ற திரையுலகத்தினரின் வயிற்றில், கன்னடர்களின் சார்பாக பிரஷாந்த் நீல் விட்ட குத்து இது,” என பாகுபலி 2 டிரைலர், மற்றும் ஆர்ஆர்ஆர் பட ஆகியவற்றை ஒப்பிட்டு தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.