Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிரடி பட வேட்டையில் இறங்கி விட்டார் சமந்தா!

30 அக், 2012 - 03:45 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னத்தின் கடல், ஷங்கரின் ஐ படங்களில் கமிட்டாகி தோல் அலர்ஜி காரணமாக விலகியவர் சமந்தா. அதனால் அந்த நேரத்தில் கைக்கு எட்டிய அந்த வாய்ப்புகள் வாய்க்கு எட்டாமல் போனதை எண்ணி ரொம்பவே வேதனைப்பட்டார் சமந்தா. இருப்பினும் இப்போது சகஜநிலைக்கு மாறி விட்டார். மீண்டும் புதிய தெம்போடு சினிமா களத்தில் குதித்திருக்கிறார். இந்நிலையில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள நீதானே என் பொன் வசந்தம் படமும் திரைக்கு வரத்தயாராகி வருவதால், இந்த வேகத்தோடு மீண்டும் தனது மார்க்கெட்டை பரபரப்பாக்கி விட வேண்டும் என்று நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் சமந்தா.

அதன் முதல்கட்டமாக சில முன்னணி இயக்குனர்களை சந்தித்து பட வேட்டை நடத்தும் சமந்தா, தனக்கு என்னவோ தீண்டத்தகாத நோய் வந்தது போல் தன்னை கழட்டி விட்ட சில மேல்தட்டு ஹீரோக்களுடனும் ரகசிய சந்திப்புகள் நடத்தி வருகிறார். அப்படி செல்லும்போது முன்பு மாதிரி உடம்பை முழுசாக கவர் பண்ணும் ஆடைகளை அணியாமல், படுகவர்ச்சியான உடையணிந்து செல்கிறாராம். சமந்தாவின் இந்த புதிய அணுகுமுறையில் சில மேல்தட்டு இளசுகள் கிறங்கிப்போவதோடு, சமந்தாவின் அழகு இப்போது இன்னும் மெருகேறியிருக்கிறது என்று படாதிபதிகளின் காதுகளில் ஓதி அவரை படங்களுக்கு கமிட் பண்ணுமாறு நச்சரித்து வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)