Advertisement

சிறப்புச்செய்திகள்

'விசில் போடு' : யுவன் - அனிருத் ரசிகர்கள் மோதல் | தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோவாக்குவதாக பணம் வாங்கி ஏமாற்றினார்: மிஷ்கின் மீது தொழிலதிபர் மகன் பரபரப்பு புகார்

02 அக், 2018 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-Director-Mysskin

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். அவர் தன்னை சினிமாவில் ஹீரோவாக்குவதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றி விட்டார் என்று தொழிலதிபர் மகன் மைத்ரேயா என்பவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

எனது அப்பாவுக்கு சினிமா தொழில் அல்ல. ஆனாலும் 150 படங்கள் வரைக்கும் பண உதவி செய்திருக்கிறார். இதனால் இழந்தது தான் அதிகம். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. இதனால் இயக்குனர் மிஷ்கினை அணுகினேன். அவர் என்னை ஹீரோவாக போட்டு படம் எடுப்பதாக உறுதி அளித்தார். இதற்காக ஒரு பெரும் தொகை கொடுத்து 2015ம் ஆண்டு ஜூலை 10ந் தேதி ஒரு ஒப்பந்தம் போட்டோம்.


"இனி நான்தான் உனக்கு அப்பா, அம்மா, காட்பாதர் எல்லாம் " என்று அப்போது கூறினார். சவரக்கத்தி படம் முடிந்ததும் நமது படத்தை தொடங்கலாம் என்று கூறினார். இதற்காக 6 மாதம் வரை காத்திருந்தோம். அதன் பிறகு விஷால் நடிக்க துப்பறிவாளன் படத்தை இயக்கினார். அப்போதும் காத்திருந்தோம்.


நாங்கள் ஒப்பந்தம் போட்டபோது அவர் எனக்கு சொன்ன கதைதான் சைக்கோ. அந்த படத்தில் நடிக்க என்னை பயிற்சி எடுத்துக் கொள்ளச் சொன்னார் நானும் எடுத்தேன். போட்டோ ஷூட், டெஸ்ட் ஷூட் எல்லாம் எடுத்தார். நான் நன்றாக நடிப்பதாக பாராட்டினார். ஆனால் இப்போது அந்த படத்தை இன்னொரு நடிகரை வைத்து எடுக்கிறார்.


இது தொடர்பாக நாங்கள் கேட்டபோது "உன்னை வைத்து படமும் எடுக்க முடியாது. உன் பணத்தையும் இப்போதைக்கு திருப்பித் தரமுடியாது" என்று கூறிவிட்டார். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பெரும் தொகை கொடுத்து 3 வருடம் அவர் சொன்னதையெல்லாம் செய்துவிட்டு ஆனால் அது நடக்காதபோது அதன் வலிதான் அதிகமாக இருக்கிறது.


நாங்கள் கொடுத்த பணத்தை விட அவர் மீது அன்பும், மரியாதையும் அதிகம் வைத்திருந்தோம். ஒப்பந்தம் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் செல்லலாம் என்று நண்பர்கள் கூறுகிறார்கள். ஆனால், நான் நம்பும் நீதிமன்றம் மிஷ்கினின் மனசாட்சி தான்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in