‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |
பாலிவுட்டின் ஜாம்பவனான அமிதாப் பச்சன் முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு உயர்ந்த மனிதன் என பெயரிட்டுள்ளனர். அமிதாப் பச்சன் உடன் எஸ்.ஜே.சூர்யாவும் முதன்மை ரோலில் நடிக்கிறார்.



கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறார். திருச்செந்தூர் முருகன் புரெடாக்சன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பை எலிமென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் இப்படம் தயாராகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெறுகிறது. 2019, மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.
"என் கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் முதல் படத்தை நான் இயக்குவது பெரிய பெருமை" என்கிறார் தமிழ்வாணன்.
"துணை இயக்குனராக திரை உலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்" என்கிறார் எஸ் ஜே சூர்யா.




