'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட்டின் ஜாம்பவனான அமிதாப் பச்சன் முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு உயர்ந்த மனிதன் என பெயரிட்டுள்ளனர். அமிதாப் பச்சன் உடன் எஸ்.ஜே.சூர்யாவும் முதன்மை ரோலில் நடிக்கிறார்.
கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறார். திருச்செந்தூர் முருகன் புரெடாக்சன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பை எலிமென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் இப்படம் தயாராகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெறுகிறது. 2019, மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.
"என் கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் முதல் படத்தை நான் இயக்குவது பெரிய பெருமை" என்கிறார் தமிழ்வாணன்.
"துணை இயக்குனராக திரை உலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்" என்கிறார் எஸ் ஜே சூர்யா.