ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |
பாலிவுட்டின் ஜாம்பவனான அமிதாப் பச்சன் முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு உயர்ந்த மனிதன் என பெயரிட்டுள்ளனர். அமிதாப் பச்சன் உடன் எஸ்.ஜே.சூர்யாவும் முதன்மை ரோலில் நடிக்கிறார்.



கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறார். திருச்செந்தூர் முருகன் புரெடாக்சன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பை எலிமென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் இப்படம் தயாராகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெறுகிறது. 2019, மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.
"என் கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் முதல் படத்தை நான் இயக்குவது பெரிய பெருமை" என்கிறார் தமிழ்வாணன்.
"துணை இயக்குனராக திரை உலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்" என்கிறார் எஸ் ஜே சூர்யா.




