அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் ஜாம்பவனான அமிதாப் பச்சன் முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். படத்திற்கு உயர்ந்த மனிதன் என பெயரிட்டுள்ளனர். அமிதாப் பச்சன் உடன் எஸ்.ஜே.சூர்யாவும் முதன்மை ரோலில் நடிக்கிறார்.
கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தை இயக்குகிறார். திருச்செந்தூர் முருகன் புரெடாக்சன்ஸ் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பை எலிமென்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் இப்படம் தயாராகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெறுகிறது. 2019, மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது.
"என் கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் முதல் படத்தை நான் இயக்குவது பெரிய பெருமை" என்கிறார் தமிழ்வாணன்.
"துணை இயக்குனராக திரை உலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்" என்கிறார் எஸ் ஜே சூர்யா.