வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகியும், கர்நாடக இசை மேதையுமான எம்.எல்.வசந்தகுமாரியின் நினைவு தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது. நேற்று எம்.எல்.வசந்தகுமாரியின் 90வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும் தபால் தலை வெளியீட்டு விழாவும் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.
சமுதாய அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எம்.எல்.வசந்தகுமாரியின் தபால் தலையை வெளியிட மத்திய ரெயில்வேதுறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சமுதாய அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதனை அறக்கட்டளை நிர்வாகி பிரீத்தி சீனிவாசன் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் பாடகியின் இந்த முக்கிய விழாவில் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.