22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகியும், கர்நாடக இசை மேதையுமான எம்.எல்.வசந்தகுமாரியின் நினைவு தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது. நேற்று எம்.எல்.வசந்தகுமாரியின் 90வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும் தபால் தலை வெளியீட்டு விழாவும் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.
சமுதாய அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எம்.எல்.வசந்தகுமாரியின் தபால் தலையை வெளியிட மத்திய ரெயில்வேதுறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சமுதாய அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதனை அறக்கட்டளை நிர்வாகி பிரீத்தி சீனிவாசன் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் பாடகியின் இந்த முக்கிய விழாவில் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.