ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகியும், கர்நாடக இசை மேதையுமான எம்.எல்.வசந்தகுமாரியின் நினைவு தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது. நேற்று எம்.எல்.வசந்தகுமாரியின் 90வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும் தபால் தலை வெளியீட்டு விழாவும் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.
சமுதாய அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எம்.எல்.வசந்தகுமாரியின் தபால் தலையை வெளியிட மத்திய ரெயில்வேதுறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சமுதாய அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதனை அறக்கட்டளை நிர்வாகி பிரீத்தி சீனிவாசன் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் பாடகியின் இந்த முக்கிய விழாவில் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.