லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் | ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? |

பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகியும், கர்நாடக இசை மேதையுமான எம்.எல்.வசந்தகுமாரியின் நினைவு தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது. நேற்று எம்.எல்.வசந்தகுமாரியின் 90வது பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நாள் விழாவும் தபால் தலை வெளியீட்டு விழாவும் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.
சமுதாய அறக்கட்டளை சார்பில் நடந்த இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், எம்.எல்.வசந்தகுமாரியின் தபால் தலையை வெளியிட மத்திய ரெயில்வேதுறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சமுதாய அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது. அதனை அறக்கட்டளை நிர்வாகி பிரீத்தி சீனிவாசன் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் பாடகியின் இந்த முக்கிய விழாவில் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.