எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் பாசறையில் இருந்து வந்தவர் கிரேன் மனோகர். சினிமா படப்பிடிப்பில் கிரேன் ஆபரேட்டராக இருந்து வந்த அவர் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் பரவலாக மற்ற டைரக்டர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.
வடிவேலு உள்ளிட்ட மெகா காமெடியன்களின் கூட்டணியில் நடித்து பிரபலமான கிரேன் மனோகர், இதுவரை காமெடி வேடங்களிலேயே நடித்திருக்கும் நிலையில், தற்போது இன்னும் பேசுமா என்றொரு படத்தில் முதன்முறையாக குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி கிரேன் மனோகர் கூறுகையில், தொடர்ந்து காமெடி வேடங்களிலேயே நடித்து வந்த என்னை இன்னும் பேசுமா என்ற படத்தில் ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். டைரக்டர் மணிவண்ணன் நடிப்பது போன்ற வேடம். கதைப்படி ஷேர் ஆட்டோ டிரைவராக நடித்துள்ள நான், கதையில் முக்கிய பங்கு வகிக்கிறேன். ஒரு தத்துவப்பாடலிலும் நடித்திருக்கிறேன். அந்த பாடல், திருமணமாகாத ஏழை பெண்களைப்பற்றிய கருத்தினை கொண்டது.
அந்த வகையில், இதுவரை ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நான் இந்த படத்தில் முதன்முறையாக கண்கலங்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறேன். முதன்முறையாக இந்த மாதிரி மனசைத் தொடும் ஒரு வேடத்தில் நடித்தது எனக்கு மனதளவில் திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார் கிரேன் மனோகர்.