தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் பாசறையில் இருந்து வந்தவர் கிரேன் மனோகர். சினிமா படப்பிடிப்பில் கிரேன் ஆபரேட்டராக இருந்து வந்த அவர் கே.எஸ்.ரவிக்குமாரின் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் பரவலாக மற்ற டைரக்டர்களின் படங்களிலும் நடித்து வந்தார்.
வடிவேலு உள்ளிட்ட மெகா காமெடியன்களின் கூட்டணியில் நடித்து பிரபலமான கிரேன் மனோகர், இதுவரை காமெடி வேடங்களிலேயே நடித்திருக்கும் நிலையில், தற்போது இன்னும் பேசுமா என்றொரு படத்தில் முதன்முறையாக குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.
இதுபற்றி கிரேன் மனோகர் கூறுகையில், தொடர்ந்து காமெடி வேடங்களிலேயே நடித்து வந்த என்னை இன்னும் பேசுமா என்ற படத்தில் ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். டைரக்டர் மணிவண்ணன் நடிப்பது போன்ற வேடம். கதைப்படி ஷேர் ஆட்டோ டிரைவராக நடித்துள்ள நான், கதையில் முக்கிய பங்கு வகிக்கிறேன். ஒரு தத்துவப்பாடலிலும் நடித்திருக்கிறேன். அந்த பாடல், திருமணமாகாத ஏழை பெண்களைப்பற்றிய கருத்தினை கொண்டது.
அந்த வகையில், இதுவரை ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நான் இந்த படத்தில் முதன்முறையாக கண்கலங்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறேன். முதன்முறையாக இந்த மாதிரி மனசைத் தொடும் ஒரு வேடத்தில் நடித்தது எனக்கு மனதளவில் திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார் கிரேன் மனோகர்.