தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கொஞ்சும் குமரி, பெற்றால் தான் பிள்ளையா உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கேஆர் இந்திரா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. காஞ்சிபுரத்தை பூர்வீமாக கொண்ட இந்திரா, 14 வயதில் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1963-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‛கொஞ்சும் குமரி' படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இந்திரா, தொடர்ந்து பெற்றால் தான் பிள்ளையா, சுமைதாங்கி, பாத காணிக்கை, ஹலோ ஜமீன்தார், கந்தன் கருணை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினியுடன் பணக்காரன், மன்னன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ‛கிரிவலம்' படத்தில் ரிச்சர்டின் பாட்டியாக நடித்தார்.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 250 படங்கள் நடித்திருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாது 500 படங்களுக்கு மேல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஏராளமான சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சென்னை, தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்த இந்திராவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்து வந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இந்திராவுக்கு கணவர் சங்கர நாராயணன், மகள் ஜெயகீதா ஆகியோர் உள்ளனர். ஜெயகீதா, தற்போது டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக உள்ளார். இந்திராவின் உடல், அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க உறுப்பினரான கே.ஆர்.இந்திராவிற்கு நடிகர் சங்கம் சார்பாக நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா, ஹேமச்சந்திரன் ஆகியோர் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாளை(மார்ச் 17-ம் தேதி), வெள்ளியன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.