இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு | கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் | நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு முதல்வராக இருந்தவர் மோடி : உன்னி முகுந்தன் பெருமிதம் | மோகன்லாலுக்கே தெரியாமல் அவர்மீது 12 வருட கோபம் : இயக்குனர் சத்யன் அந்திக்காடு புது தகவல் | நடிகர் சித்திக்கிற்கு அரபு நாடுகளுக்கு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நீதிமன்றம் |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தனியாக இணையதளம் தொடங்கி உள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று ரஷிய கலாச்சார மையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு இணையதளத்தை துவக்கி வைத்து கமல்ஹாசன் பேசியதாது:
நான் சினிமாவில் என்னவாக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கற்றேன். டெக்னீஷியன் ஆவதுதான் விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
யாரோ ஒருத்தர்( சுப்பிரமணியசாமி) தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கு பொறுக்கினாலும் டில்லியில் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம். இது தன்மானம், அரசியல் இல்லை.
குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோஷம். கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் கண்ணன், ராஜீவ் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.