'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 9ம் தேதி வெளிவந்த 'சென்னை 28 - இரண்டாம் இன்னிங்ஸ்' படம் கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 23ம் தேதி வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போனதால், சில தியேட்டர்களில் மீண்டும் 'சென்னை 28 - 2' படத்தைத் திரையிட ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார். சினிமா பிரியரான அஷ்வின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் உடையவர்.
'சென்னை 28 - 2' படத்தைப் பார்த்த அஷ்வின், “சென்னை 28 - 2, என்ன ஒரு அற்புதமான படம். என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாகத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் படத்தில் நானும் பங்கெடுத்திருக்கலாம்,” எனப் பாராட்டியுள்ளார்.