கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தென்னிந்திய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு ரொமான்ஸ் காட்டத் தெரியவில்லை என்று 'காதலிக்க நேரமில்லை' படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
கும்பகோணத்தை சேர்ந்தவரான நிர்மலா முறைப்படி பரத நாட்டியம் கற்றவர். அதில் மேற்கொண்டு பயிற்சி பெற சென்னை வந்தார். இங்கு நடந்த நடன நிகழ்ச்சிகள் பலவற்றில் ஆடினார் அப்போது அவருக்கு மேக்அப்மேனாக இருந்த நாரயணசாமி என்பவர் சினிமாவிலும் மேக்அப் மேனாக இருந்தார். அவர்தான் நிர்மலாவை சினிமாவில் நடிக்கலாம் என்று ஆலோசனை கூறினார். சில கம்பெனிகளில் வாய்ப்புகள் தேடினார் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் நவீனன், நிர்மலாவை இயக்குனர் ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது ஸ்ரீதர் “அடுத்து நான் 'காதலிக்க நேரமில்லை' என்ற படம் எடுக்கிறேன். அப்போது அழைத்து வாருங்கள்” என்று கூறினார். சில மாதங்களுக்கு பிறகு 'காதலிக்க நேரமில்லை' ஆடிசன் நடந்தது. அதில் கலந்து கொண்ட நிர்மலா படத்தில் நடிக்க தேர்வானார்.
முதல் நாள் படப்பிடிப்பு. “அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...” என்ற பாடலை எடுத்தார் ஸ்ரீதர். இந்த பாடலில் ஒரு ஆணை நினைத்து, ரசித்து காதல் ரசம் சொட்ட சொட்ட நடிக்க வேண்டும். ஆனால் நிர்மலாவுக்கு ரொமான்ஸ் மூடு வரவில்லை. அவர் பரதநாட்டியம் போலவே ஆடினார். இதனால் ஸ்ரீதர் “உனக்கு இந்தப் படமும் கேரக்டரும் சரிபட்டு வராது அடுத்து படத்துல வாய்ப்பு தர்றேன்னு அனுப்பி விட்டார்”. கண்ணீர்விட்டபடியே திரும்பினார் நிர்மலா. அதன் பிறகு நிர்மலாவுக்கு பதிலாக ராஜஸ்ரீ நடித்தார். ஸ்ரீதரும் நிர்மலாவுக்கு கொடுத்த வாக்குப்படி தனது அடுத்த படமான 'வெண்ணிற ஆடை'யில் நிர்மலாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அன்று முதல் நிர்மலா 'வெண்ணிற ஆடை நிர்மலா' ஆனார்.