ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளவர் ரஜினிகாந்த். இவருடைய படம் வெளிவந்தாலே திருவிழாக் கோலம்தான். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் விஷயம் அது. இப்போது ஒன்றிரண்டு வயது ஆகும் குழந்தைகள் கூட ரஜினிகாந்த் படத்தைப் பார்த்தாலே நடனம் ஆட ஆரம்பித்து விடுகின்றன. அப்படி ஒரு மாயத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த்.
அவரைப் பற்றியும், அவருடைய ரசிகர்களைப் பற்றியும் தயாரிக்கப்பட்டுள்ள டாகுமென்டரி படம் ஒன்று வெனிஸ்-ல் நடைபெற உள்ள 72வது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. ரிங்கு கால்சி என்பவர் தன்னுடைய நண்பர் ஜோயோஜீத் பால் என்பவருடன் இணைந்து இந்த டாகுமென்டரியை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் மிகப் பெரிய கட்-அவுட்டுகள், அதற்கு நடக்கும் பாலாபிஷேகம், ஊர்வலங்கள், ரஜினிகாந்த் ரசிகர்கள் நடத்தும் மற்ற சமூக நல உதவிகள் உட்பல பல விஷயங்களை இணைத்திருக்கிறார்களாம்.
இந்த டாகுமென்டரியை உருவாக்குவதற்காக தான் வேலை பார்த்த தொலைக்காட்சி நிறுவனப் பணியை ராஜினாமா செய்து விட்டு வந்திருக்கிறார் ரிங்கு. இந்த டாகுமென்டரியை கடந்த நான்கு வருடங்களாக உருவாக்கி வருகிறார்களாம். மிகப் பெரிய விருதுகளை இதுவரை வாங்காத ரஜினிகாந்துக்கு அவருடைய ரசிகர்களே பெரிய விருதுகள் என்பது சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் ஒலி,ஒளிக்கப் போகிறது.