சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ஹரிகுமார்- கார்த்திகா நடிப்பில் வெளியான படம் தூத்துக்குடி. அந்த படத்தை சஞ்சய்ராம் இயக்கியிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கு கிளியாந்தட்டு தூத்துக்குடி-2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் பாகத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தூத்துக்குடியிலேயே நடந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்துள்ளது.
சஞ்சய்ராம் இயக்கி வரும் இந்த படத்தில் குகன் என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றபடி, சஞ்சய்ராம் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம். முதல் பாகத்தில் ஹரிக்குமார் நடித்தது போன்ற ஒரு வெயிட்டான வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.
இதுவரை, 95 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில, இன்னும் 5 சதவிகிதம்தான் படப்பிடிப்பு நடைபெற வேண்டிய உள்ளதாம். இதற்கிடையே போஸ்ட் புரடக்சன்ஸ் வேலைகளும் துரிதமாக நடந்த வரும் நிலையில், ஏப்ரலில் திரைக்கு வருகிறதாம் கிளியாந்தட்டு தூததுக்குடி-2. மேலும், முதல் பாகத்தில் மருந்துக்கும் கவர்ச்சியை காண்பிக்காத சஞ்சய்ராம் இந்த படத்தில் படுகவர்ச்சியான காட்சிகளையும் இணைத்துளளாராம்.