'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |
ஹரிகுமார்- கார்த்திகா நடிப்பில் வெளியான படம் தூத்துக்குடி. அந்த படத்தை சஞ்சய்ராம் இயக்கியிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கு கிளியாந்தட்டு தூத்துக்குடி-2 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் பாகத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தூத்துக்குடியிலேயே நடந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்துள்ளது.
சஞ்சய்ராம் இயக்கி வரும் இந்த படத்தில் குகன் என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றபடி, சஞ்சய்ராம் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளாராம். முதல் பாகத்தில் ஹரிக்குமார் நடித்தது போன்ற ஒரு வெயிட்டான வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.
இதுவரை, 95 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில, இன்னும் 5 சதவிகிதம்தான் படப்பிடிப்பு நடைபெற வேண்டிய உள்ளதாம். இதற்கிடையே போஸ்ட் புரடக்சன்ஸ் வேலைகளும் துரிதமாக நடந்த வரும் நிலையில், ஏப்ரலில் திரைக்கு வருகிறதாம் கிளியாந்தட்டு தூததுக்குடி-2. மேலும், முதல் பாகத்தில் மருந்துக்கும் கவர்ச்சியை காண்பிக்காத சஞ்சய்ராம் இந்த படத்தில் படுகவர்ச்சியான காட்சிகளையும் இணைத்துளளாராம்.




