சினிமா பற்றி சினிமா எடுத்தால் ஓடாதா? : கவின் ஆதங்கம் | சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு |
தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் மணிரத்னம். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகிறது. பிரமாண்டமாக அவர் இயக்கி தயாரித்த ராவணன், மீடியம் பட்ஜெட்டில் தயாரித்த கடல் போன்றவை சமீபத்திய தோல்விகள். அதனால் சிம்பிளாக, விரைவாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் மணிரத்னம்.
எந்த விளம்பரமும் இல்லாமல், ஆர்ப்பாட்டமும் இல்லாமல், படம் பற்றிய தகவல்கள் எதுவும் கசியாமல் அழகான ஒரு காதல் படத்தை எடுத்து தனது படைப்பாற்றலை மீண்டும் நிரூபிப்பதோடு, விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்தப் படம் இருக்க வேண்டும் என்ற அவர் முடிவு செய்தார். இதற்காக எந்த அறிவிப்பும் இன்றி சில மாதங்களுக்கு முன்பாகவே தனது படப்பிடிப்பை துவங்கி விட்டார்.
படத்தில் மம்முட்டி மகன் துல்கர்சல்மான் ஹீரோவாக நடிக்கிறார், நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார், பிரகாஷ் ராஜ் வில்லன், பைவ் ஸ்டார் கனிகா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் ஓகே கண்மணி. இது மணியின் கட்டுப்பாடுகளை மீறி கசிந்த தகவல்கள்.
இப்போது அவர் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்து விட்டு படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளில் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. எந்த கலப்பும் இல்லாத, அக்மார்க் காதல் கதையாம். இன்றைய இளைஞர்களின் உள்ளத்தை உருக்கும் விதமாக இதனை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.