Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆந்திராவை சுற்றும் சூர்யா..!

07 ஆக, 2014 - 05:15 IST
எழுத்தின் அளவு:

ரசிகர் மன்றங்கள் இல்லாமலே கதாநாயகனாக கொடிகட்டிப்பறந்தவர் சிவகுமார். அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் ரசிகர் மன்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானதிலிருந்து பல வருடங்கள் வரை சூர்யாவும் ரசிகர் மன்றங்களை ஆதரிக்கவில்லை. அவரது போட்டி நடிகர்களை பார்த்து பிறகு, சூர்யாவுக்கும் ரசிகர் மன்றம் ஆசை வந்தது. அஞ்சான் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதாலோ என்னவோ ரசிகர்கள் மீதும், ரசிகர் மன்றங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.


அஞ்சான் படத்தின் டீசர் சக்சஸ் மீட், ஆடியோ ரிலீஸ் என அனைத்து விழாக்களிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் சூர்யா. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுக்க உள்ள தன் ரசிகர்களை நேரில் சந்திப்பதன் மூலம் தன் ரசிக பலத்தை உயர்த்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, அங்குள்ள நிர்வாகிகள் மூலம் ரசிகர்களை திரட்டி வரச் செய்து, அவர்கள் முன் உரையாற்றினார். அடுத்த கட்டமாக, அஞ்சான் படத்தின் தெலுங்கு டப்பிங்கான சிக்கந்தர் படத்தை ஆந்திராவில் ஓட வைக்க, சில நாட்களாக ஆந்திராவில் முகாமிட்டிருக்கிறார் சூர்யா. ஐதராபாத், விசாகப்பட்டினம் என ஆந்திராவில் உள்ள முக்கிய ஊர்களுக்கு சென்று தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் சூர்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)