மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
ரசிகர் மன்றங்கள் இல்லாமலே கதாநாயகனாக கொடிகட்டிப்பறந்தவர் சிவகுமார். அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் ரசிகர் மன்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானதிலிருந்து பல வருடங்கள் வரை சூர்யாவும் ரசிகர் மன்றங்களை ஆதரிக்கவில்லை. அவரது போட்டி நடிகர்களை பார்த்து பிறகு, சூர்யாவுக்கும் ரசிகர் மன்றம் ஆசை வந்தது. அஞ்சான் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு தேவை என்பதாலோ என்னவோ ரசிகர்கள் மீதும், ரசிகர் மன்றங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அஞ்சான் படத்தின் டீசர் சக்சஸ் மீட், ஆடியோ ரிலீஸ் என அனைத்து விழாக்களிலும் தன்னுடைய ரசிகர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் சூர்யா. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுக்க உள்ள தன் ரசிகர்களை நேரில் சந்திப்பதன் மூலம் தன் ரசிக பலத்தை உயர்த்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, அங்குள்ள நிர்வாகிகள் மூலம் ரசிகர்களை திரட்டி வரச் செய்து, அவர்கள் முன் உரையாற்றினார். அடுத்த கட்டமாக, அஞ்சான் படத்தின் தெலுங்கு டப்பிங்கான சிக்கந்தர் படத்தை ஆந்திராவில் ஓட வைக்க, சில நாட்களாக ஆந்திராவில் முகாமிட்டிருக்கிறார் சூர்யா. ஐதராபாத், விசாகப்பட்டினம் என ஆந்திராவில் உள்ள முக்கிய ஊர்களுக்கு சென்று தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் சூர்யா.