அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி |
இளம் பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்தவர் கபிலன். சில வருடங்களுக்கு முன், உன் சமையல் அறையில் உப்பா சர்க்கரையா..ஆல் தோட்ட பூபதி உட்பட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி வந்தார். குறிப்பாக விஜய் நடித்த அனைத்துப் படங்களிலும், அவருக்கான அறிமுகப்பாடல்களை கபிலனே எழுதினார். விஜய்யின்னு இமேஜை பில்ட்அப் பண்ணும் வகையில் கபிலன் எழுதும் வரிகள் விஜய்க்கும் மிகவும் பிடித்துப்போய், தன்னை வைத்து படம் பண்ணும் இயக்குநர்களிடம் எல்லாம் கபிலனை வைத்து அறிமுகப்பாடல் எழுத வைக்கும்படி விஜய்யே கேட்டுக்கொள்வார்.
விஜய்யைப் போலவே கமலும் கபிலனின் கவிதை வரிகளுக்கு ரசிகர். அதன் தொடர்ச்சியாய் தசாவதாரம் படத்தில கபிலனை நடிகராக்கினார் கமல். இப்படியாக மளமளவென வளர்ந்து வந்த கபிலன் என்ன காரணத்தினாலோ திடீரென காணாமல் போனார். நா.முத்துகுமார், மதன் கார்க்கி என்ற இரு பெரும் கவிதை சூறாவளியினால் காணாமல் போனவர்களில் கபிலனும் ஒருவர் என்றானது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபிலனின் பாடல் வரிகள் காதில் விழுகின்றன. கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடித்தா என்ற பாடலை எழுதி இருக்கிறார் கபிலன்.