மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
நடிகை ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து செய்தார். நீதிமன்ற வழக்கில் அவரது மகளும் தந்தையுடன் சென்று விட்டார். இந்த நிலையில் விரக்தியில் தனிமையில் வசித்து வந்த ஊர்வசி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டரும், சிவில் என்ஜினீயருமான சிவபிரசாத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 50 வயதை நெருங்கும் நேரத்தில் ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் இரண்டாவது திருமணம் செய்தது ஏன் என்பது பற்றி ஊர்வசி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: சிவபிரசாத் யாரோ எவரோ அல்ல எங்கள் குடும்ப நண்பர். எங்கள் வீட்டின் நல்லது கெட்டதில் முதல் ஆளாக இருப்பார். எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருக்கும் அவரை பிடிக்கும் குறிப்பாக என் தாத்தாவுக்கும், தம்பி கமலுக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஒருநாள் மன அமைதிக்காக திருவண்ணாமலை ரமாணஸ்ரமத்திற்கு சென்றோம். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது அங்கு மாலை கொண்டு வந்த பூஜாரி என் அருகில் அமர்ந்திருந்த சிவபிரசாத்தை என் கணவர் என்று கருதிக் கொண்டு இரண்டுபேருக்கும் மாலை அணிவித்து விட்டார். பதறிப்போய் சிவா அதனை கழற்ற முயன்றார். அருகில் இருந்த எனது தாத்தா அவரை தடுத்து விட்டார். பூஜை முடியும் வரை இருவரும் கழுத்தில் மாலையுடன் இருந்தோம். அந்த நிமிடங்கள் என் மனதில் என்னென்வோ நினைவுகள் தோன்றியது. அதுவரை மறு திருமணம் பற்றி யோசித்திராத எனக்கு அதைப் பற்றிய எண்ணம் வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு நான்கு வருடங்கள் காத்திருந்தோம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம். தாத்தா எங்களை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்த தொடங்கினார். அதன்பிறகுதான் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு பல கோவில்களுக்கு சென்று வழிபட்டோம். இப்போது என் வாழ்வில் இழந்த சந்தோஷங்கள் திரும்ப கிடைத்திருக்கிறது.
இவ்வாறு ஊர்வசி கூறியுள்ளார்.