'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி | 'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு | கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம் | பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் |
நடிகை ஊர்வசி மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து செய்தார். நீதிமன்ற வழக்கில் அவரது மகளும் தந்தையுடன் சென்று விட்டார். இந்த நிலையில் விரக்தியில் தனிமையில் வசித்து வந்த ஊர்வசி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டரும், சிவில் என்ஜினீயருமான சிவபிரசாத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 50 வயதை நெருங்கும் நேரத்தில் ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்து கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் இரண்டாவது திருமணம் செய்தது ஏன் என்பது பற்றி ஊர்வசி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: சிவபிரசாத் யாரோ எவரோ அல்ல எங்கள் குடும்ப நண்பர். எங்கள் வீட்டின் நல்லது கெட்டதில் முதல் ஆளாக இருப்பார். எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருக்கும் அவரை பிடிக்கும் குறிப்பாக என் தாத்தாவுக்கும், தம்பி கமலுக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஒருநாள் மன அமைதிக்காக திருவண்ணாமலை ரமாணஸ்ரமத்திற்கு சென்றோம். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது அங்கு மாலை கொண்டு வந்த பூஜாரி என் அருகில் அமர்ந்திருந்த சிவபிரசாத்தை என் கணவர் என்று கருதிக் கொண்டு இரண்டுபேருக்கும் மாலை அணிவித்து விட்டார். பதறிப்போய் சிவா அதனை கழற்ற முயன்றார். அருகில் இருந்த எனது தாத்தா அவரை தடுத்து விட்டார். பூஜை முடியும் வரை இருவரும் கழுத்தில் மாலையுடன் இருந்தோம். அந்த நிமிடங்கள் என் மனதில் என்னென்வோ நினைவுகள் தோன்றியது. அதுவரை மறு திருமணம் பற்றி யோசித்திராத எனக்கு அதைப் பற்றிய எண்ணம் வந்தது.
இந்த சம்பவத்துக்கு பிறகு நான்கு வருடங்கள் காத்திருந்தோம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டோம். தாத்தா எங்களை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்த தொடங்கினார். அதன்பிறகுதான் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பிறகு பல கோவில்களுக்கு சென்று வழிபட்டோம். இப்போது என் வாழ்வில் இழந்த சந்தோஷங்கள் திரும்ப கிடைத்திருக்கிறது.
இவ்வாறு ஊர்வசி கூறியுள்ளார்.




