நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் பெறும் விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. தணிக்கை வாரியத்தை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, பின்னர் ஜனவரி 20க்கு தள்ளி வைத்தது. அதற்குள் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தது தயாரிப்பு நிறுவனம். அந்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கேட்டுக் கொண்டது உச்ச நீதிமன்றம்.
நேற்று முன்தினம் ஜனவரி 20ம் தேதி வழக்கு விசாரணை அமர்வு முன்பு மீண்டும் வந்தது. இரு தரப்புக்கும் வாதம் செய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பின் தீர்ப்பை அமர்வு தள்ளி வைத்தது. நாளை ஜனவரி 23ம் தேதிக்கு தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
ஆனால், நாளை தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் விடுமுறை. எனவே, ஜனவரி 27ம் தேதிதான் வழங்கப்படலாம் என்றும் தற்போது செய்திகள் வந்துள்ளது.