8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

“பத்ரகாளி” என்ற பெயரில் எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவலை அதே பெயரில் திரைப்படமாக தனது “சினி பாரத்” என்ற தயாரிப்புப் பதாகையின் கீழ் தயாரித்து, இயக்கி வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர். 'இசைஞானி' இளையராஜா தனது திரையிசைப் பயணத்தை ஆரம்பித்த புதிதில் அவரது நான்காவது திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “பத்ரகாளி”. பிராமணக் குடும்பத்தின் பின்னணி கொண்ட இக்கதையின் நாயகனாக நடிகர் சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட, நாயகியாக தேர்வானவர்தான் நடிகை ராணி சந்திரா.
கேரள மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மிஸ் கேரளா பட்டத்தை வென்றிருந்த நிலையில், மலையாளத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, சுமார் 60 திரைப்படங்கள் வரை மலையாளத்தில் நடித்திருந்த நிலையில், “பொற்சிலை”, “தேன் சிந்துதே வானம்” போன்ற ஓரிரு தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தும், தமிழில் ஒரு சரியான அறிமுகம் கிடைக்காதிருந்த நிலையில், இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்த திரைப்படம்தான் இந்த “பத்ரகாளி”.
“பத்ரகாளி” திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து, ஓரிரு காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியிருந்த நிலையில், ஏறக்குறைய முழுப் படப்பிடிப்பும் முடிவடையும் தருவாயில் இருந்த போது, துபாயில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாய், சகோதரிகள் மற்றும் கலைக்குழுவினருடன் துபாய் சென்று கலை நிகழ்ச்சி நடத்தி முடித்து, திரும்பி வரும் வேளையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இவர்களது விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் உயிரிழக்க நேரிட்டது.
நடிகை ராணி சந்திராவின் எதிர்பாராத இந்த திடீர் மரணம் “பத்ரகாளி” படக் குழுவினைரை நிலை குலையச் செய்தது. கதையில் ஏதும் மாற்றம் செய்ய முடியாத நிலை இருக்க, அதே சமயத்தில் கதையின் நாயகியான ராணி சந்திரா சம்பந்தப்பட்ட படத்தின் உச்சக் காட்சிகளை எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயமும் படக் குழுவினரை நெருக்க, படத்தின் இயக்குநர் ஏ சி திருலோகசந்தரின் தீவிர யோசனைக்குப் பின், நடிகை ராணி சந்திராவைப் போன்ற தோற்றம் உள்ள துணை நடிகைகள் யாராவது கிடைப்பார்களா என தேடிப் பார்த்து, இறுதியில் அவரைப் போன்ற உடல்வாகு கொண்ட புஷ்பா என்ற ஒரு துணை நடிகையை தெரிவு செய்து, அவரை வைத்தே படத்தின் இறுதிக் காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் ஏ சி திருலோகசந்தர்.
ராணி சந்திராவிற்குப் பதிலாக வேறு ஒருவரை வைத்து படமாக்கியிருக்கின்றனர் என பார்வையாளர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படத்தின் உச்சக் காட்சி இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரின் திறமையால் திறமையாக படமாக்கப்பட்டு, படமும் வெளிவந்து, ஒரு மாபெரும் வெற்றியையும் பதிவு செய்தது.




