பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மெட்டா ஏஐ-க்கு குரல் கொடுத்த முதல் இந்திய பிரபலம் என்ற சாதனையை தற்போது அவர் படைத்துள்ளார்.
இதுபற்றி தீபிகா வெளியிட்ட பதிவில், ‛‛மெட்டா ஏஐ-யில் நானும் ஒரு அங்கமாகி உள்ளேன். என் குரல் நீங்கள் இனி ஆங்கிலத்தில் நீங்கள் வாய்ஸ் சேட் செய்யலாம்'' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வாட்ஸ் அப், ரேபான் மெட்டா, ஸ்மார்ட் கண்ணாடிகள், இன்ஸ்டாகிராம் மற்றும் பல தலங்களில் அவரது தனித்துவமான குரல் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு முன்பு மெட்டா ஏஐக்கு ஜான் சீனா, ஜுடி டென்ச் உள்ளிட்ட பிரபலங்கள் குரல் கொடுத்திருந்தார்கள். இப்போது தீபிகாவின் குரலும் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த மெட்டா ஏஐ மூலம் தீபிகாவின் குரல் ஒலிக்கப் போகிறது.