சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளிவந்தது. ஒரு விருது விழாவிலும் அது பற்றி கமல்ஹாசன் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் அது குறித்து பேசுகையில், “அடுத்து ரெட்ஜெயன்ட், ராஜ்கமல் பிலிம்ஸ் இரண்டு நிறுவனத்துக்கும் சேர்ந்து ஒரு படம் பண்ணப் போறேன். இன்னும் டைரக்டர் முடிவாகல. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை. கரெக்டான கதை, கதாபாத்திரம் கிடைக்கணும். கிடைச்சா ஆக்ட் பண்ணுவேன்,” என்றார்.
ஆக, லோகேஷ் கனகராஜ் அந்தப் படத்தை இயக்குவார் என்று வந்த செய்திகள் பொய் என்பது ரஜினியின் பேச்சு மூலம் உறுதியாகி உள்ளது. சரியான கதை, கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிப்பார்கள் எனத் தெரிகிறது.