ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் |

இட்லி கடை பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் மானேஜர் ஸ்ரேயாஸ், ‛‛நீங்க நல்லவரா இருங்க, ரொம்ப நல்லவராக இருக்காதீங்க. ஐ டி விங்கை கத்துக்கோங்க. ஒருத்தன் 10 பேரை எதிர்த்தால் அவன் வீரன். ஒருத்தனை 10 பேரை எதிர்த்தால் அவன் தலைவன். உங்களால வாழ்ந்தவங்க, நேருக்கு நேர் உங்களுடன் நடிச்சு மோதினால் ஓகே.. கம்யூட்டர் வெச்சு ஏதோ செய்றாங்க'' என மறைமுக சாடினார்.
அதே போல் தனுஷ் ஹேட்டர்ஸ் குறித்து பேசினார். ‛‛ஒரு 30 பேர் ஒரு கூட்டணி வெச்சு ஏதோ பண்ணுறாங்க'' என்றார். தனக்கு எதிராக சமூக வலைதளத்தில் சிலர் சதி செய்வது போல அவர் பேச்சு இருந்தது. தனுஷால் வாழ்ந்தவர்கள் என ஸ்ரேயாஸ் சொல்வது சிவகார்த்திகேயனையா? விக்னேஷ் சிவன், நயன்தாராவையா? அனிருத்தையா? என கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் மூவரும் தனுஷால் வளர்ந்தவர்கள். இப்போது நட்பில் இல்லாதவர்கள். இவர்களில் யாரை சொல்கிறார்கள். இவர்கள் தனுசுக்கு எதிராக செய்கிறார்கள் என்று பலர் கேட்கிறார்கள். இவர்கள் சோஷியல் மீடியாவில் தனுசுக்கு எதிராக ஆட்கள் வைத்து தவறான செய்தி, மீம்ஸ் பரப்புகிறார்களா அல்லது தனுஷ் தரப்பு இப்படி நினைத்து கொண்டு புலம்புகிறதா என்றும் கோலிட்டில் பேசப்படுகிறது.




