ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித் குமார், லட்சுமி விரதத்தை முன்னிட்டு சென்னை வந்திருந்தார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு தாம்பூலத்தில் திருநீரை எடுத்து தனது மனைவி ஷாலினியின் நெற்றியில் வைத்து விடுகிறார் அஜித்குமார்.
அதையடுத்து அவர் அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். அப்போது அவரை தூக்கி விட்டபடி, தன்னருகில் நிற்பவர்களை பார்த்து, ''வீட்ல போய் நான் காலில் விழணும்'' என்று சிரித்தபடியே ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார் அஜித். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.