'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

பாலிவுட் நடிகராக அனுபம் கெர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் பிரபுதேவா நடித்த விஐபி, லிட்டில் ஜான், குற்றப் பத்திரிக்கை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் தற்போதும் பிஸியான நடிகராக நடித்து வரும் அனுபம் கெர் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். அதற்கான காரணத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பல வீடுகளில் அப்பா இறந்த பிறகு பிள்ளைகளிடம் சொத்துக்களை பிரிப்பதில் பிரச்சனை ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பல நண்பர்களிடம் பேசியபோது அதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும் சில பேர் தந்தையை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் இன்னும் சிலர் சொத்தை எழுதி வைக்கும்படி கையெழுத்து போடச் சொல்லி நிர்பந்திப்பதாகவும் பல நிகழ்வுகளை கூறினார்கள். வீடு வாசல் என சொத்தாக பிரித்துக் கொடுப்பதை விட பணத்தை பிரித்துக் கொடுப்பது எளிது என்பதால் இப்போது வரை வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.
அதேசமயம் 1978ல் மதுமதி கபூர் என்பவரை அனுபம் கெர் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களிலேயே முதல் மனைவி பிரிந்து சென்றுவிட அதன் பிறகு 1985 கிரண் கெர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத நிலையில் இரண்டாவது மனைவிக்கு ஏற்கனவே பிறந்த மகனான சிக்கந்தர் கெர் என்பவரை வளர்ப்பு மகனாக வளர்த்து வருகிறார். இப்படி ஒரே ஒரு மகன், அதுவும் வளர்ப்பு மகன் மட்டுமே இருக்கும் நிலையில், அப்படி யாருக்கு இடையே சொத்து பிரச்சனை வந்து விடப்போகிறது என்று வாடகை வீட்டில் அனுபம் கெர் வசித்து வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.